திண்டுக்கல்: குடும்ப பிரச்சினையால் தூக்கில் தொங்கிய தாய்-மகள் - சிறுமி கவலைக்கிடம்
குடும்ப பிரச்சினை காரணமாக தாய்-மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Recommended Video
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக 2 மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் பாண்டி. இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வீரம்மாள் 35. இவர்களுக்கு ராஜதுரை 15 என்ற மகனும், ரஞ்சனி 14, ரஞ்சிதா 11 என்ற மகள்களும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்துவந்தனர்.
பாண்டிக்கும், வீரம்மாளுக்கும் கடந்த சில நாட்களாகவே குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் தெரிகிறது. இந்நிலையில், இன்று பாண்டி வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் மகன் ராஜதுரையும் வெளியில் சென்றிருக்கிறார்.
கடும் மன உளைச்சலில் இருந்த வீரம்மாள் மற்றும் மகள்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, 3 பேரும் வீட்டின் உள்ளேயே தூக்கு போட்டுக் கொண்டனர். இதனால் அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 2 மகள்களுடன் தாய் தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் வீரம்மாளும் ரஞ்சிதாவும் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஞ்சனி உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.