தர்மபுரியில் பெற்ற குழந்தையை ரூ.50,000க்கு விற்ற தாய்
தர்மபுரி: தர்மபுரியில் பெற்ற குழந்தையை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்தவர் ராமன்(29). இவருக்கும் இதே ஊரை சேர்ந்த அஞ்சலி (24) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து வாழ்வது என முடிவு செய்து பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி அஞ்சலிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை அவரது கணவர் ராமருக்கு பிறந்தது என்பதால் அதை வளர்க்க அஞ்சலி விரும்பவில்லை.
இதனால் அஞ்சலி தனது குழந்தையை யாருக்காவது கொடுத்துவிட முடிவு செய்தார். இந்த தகவல் அறிந்த இரு பெண்கள், அஞ்சலியிடம் குழந்தையை நல்ல விலைக்கு விற்பனை செய்து தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். இதனையடுத்து பென்னாகரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு அந்த குழந்தையை ரூ. 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.
இந்த தகவல் கிடைத்த பென்னாகரம் போலீசார் இது குறித்து ரகசிய விசாரணை நடத்தினர். இதில் அஞ்சலி தனது குழந்தையை விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பெற்ற குழந்தையை விற்பனை செய்ய முன் வந்த அஞ்சலி, அவருக்கு துணை போன ஆனந்த், செல்வி, மாதம்மாள் ஆகிய 4 பேரை கைது போலீசார் செய்தனர். விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.