முல்லைப் பெரியாறு தீர்ப்பு- தமிழகம் வெல்ல தூணாக துணை நின்ற நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்க உச்சநீதிமன்றம் முன்வந்தது. அப்போது தமிழகத்தில் திமுக அரசு நடைபெற்றுக் கொண்டிருந்தது. தமிழக அரசிடம் இந்த குழுவில் யாரை நியமிக்கலாம் என கேட்ட போது முதல்வராக இருந்த கருணாநிதி,. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனை அக்குழுவில் இடம்பெறச் செய்தார்.
அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் தமிழக அரசின் பிரதிநிதியாக அக்குழுவில் இடம்பெற்றார்.
அணையை ஆய்வு செய்வதற்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் இருவர் தேவை என ஆலோசனை சொன்னது தமிழகப் பிரதிநிதியான நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன். அதன் பின்னர்தான் தொழில் நுட்ப வல்லுநர்களான சி.டி.தத்தா, டி.கே.மேத்தா ஆகிய இருவரும் ஆனந்த் குழுவில் இடம் பெறுகின்றனர்.
இப்படி தயாரிக்கப்பட்ட ஆனந்த் குழு அறிக்கைகயால்தான் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று உறுதியான தீர்ப்பைக் கொடுத்து தமிழகம் கோரியபடி 142 அடிக்கு நீரை தேக்கி வைக்க அனுமதித்தது.
5 மாவட்ட வாழ்வாதாரத்தை காத்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புக்கு காரணமாக இருந்த தமிழகப் பிரதிநிதி நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணனுக்கு முல்லைப் பெரியாறு அணையால் பயனடையும் விவசாயிகள் காலந்தோறும் நன்றி பாராட்டுவர்.












Click it and Unblock the Notifications