138 அடியைத் தாண்டியது முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம்.. விரைவில் 142 அடியை எட்டும்
தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 138 அடியைத் தாண்டியுள்ளது. விரைவில் அணை 142 அடியை எட்டும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று பொறியாளர்கள் குழு ஆய்வு செய்தது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. தற்போது நீர் மட்டம் 138 அடியைத் தாண்டியுள்ளது. அணையில் 142 அடி வரை நீர் தேக்கிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டும் இதே கால கட்டத்தில் 142 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போதும் 142 அடி வரை நீர் மட்டும் உயரும் எனத் தெரிகிறது. நீர் மட்டம் அனுமதிக்கப்பட்ட கொள்ளளவைத் தொட்டதும் அணையில் தண்ணீர் திறக்கப்படும்.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்யுமாறு அணையின் கண்காணிப்புக் குழுத் தலைவர் நாதன் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, இன்று மத்திய நீர் வள ஆணைய செயற்பொறியாளர் அம்பர்ஜி ஹரீஸ், கிரிஷ் தலைமையில் தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாதவன் உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், கேரள நீர் பாசனத்துறை அதிகாரிகள் ஜார்ஜ் டேனியல், பிரசீது ஆகியோர் இன்று முல்லைப் பெரியாறு அணைக்கு வந்தனர்.
அணையின் நீர் மட்டம், நீர் வரத்து, மழை நிலவரம், கசிவு நீர் உள்ளிட்ட விபரங்களை ஆய்வு செய்தனர். அணையின் நீர் மட்டம் 142 அடியை நெருங்கும் பட்சத்தில் தண்ணீர் திறந்து விடுவதற்கு வசதியாக ஷட்டர்களை மேலும், கீழும் இயக்கி சோதனை நடத்தினர். தொடர்ந்து நாளையும் முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை, கேலரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தப்படவுள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications