138 அடியைத் தாண்டியது முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம்.. விரைவில் 142 அடியை எட்டும்
தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 138 அடியைத் தாண்டியுள்ளது. விரைவில் அணை 142 அடியை எட்டும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று பொறியாளர்கள் குழு ஆய்வு செய்தது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. தற்போது நீர் மட்டம் 138 அடியைத் தாண்டியுள்ளது. அணையில் 142 அடி வரை நீர் தேக்கிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டும் இதே கால கட்டத்தில் 142 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போதும் 142 அடி வரை நீர் மட்டும் உயரும் எனத் தெரிகிறது. நீர் மட்டம் அனுமதிக்கப்பட்ட கொள்ளளவைத் தொட்டதும் அணையில் தண்ணீர் திறக்கப்படும்.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்யுமாறு அணையின் கண்காணிப்புக் குழுத் தலைவர் நாதன் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, இன்று மத்திய நீர் வள ஆணைய செயற்பொறியாளர் அம்பர்ஜி ஹரீஸ், கிரிஷ் தலைமையில் தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாதவன் உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், கேரள நீர் பாசனத்துறை அதிகாரிகள் ஜார்ஜ் டேனியல், பிரசீது ஆகியோர் இன்று முல்லைப் பெரியாறு அணைக்கு வந்தனர்.
அணையின் நீர் மட்டம், நீர் வரத்து, மழை நிலவரம், கசிவு நீர் உள்ளிட்ட விபரங்களை ஆய்வு செய்தனர். அணையின் நீர் மட்டம் 142 அடியை நெருங்கும் பட்சத்தில் தண்ணீர் திறந்து விடுவதற்கு வசதியாக ஷட்டர்களை மேலும், கீழும் இயக்கி சோதனை நடத்தினர். தொடர்ந்து நாளையும் முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை, கேலரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தப்படவுள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications