முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு- கேரளா தலையிடக் கூடாது: உம்மன் சாண்டிக்கு ஓ.பி.எஸ். கடிதம்
சென்னை: தமிழக அரசுக்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தீர் திறப்பதை முறைப்படுத்துவதில் கேரளா தலையிடக் கூடாது என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
152 அடி கொள்ளவு கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு நீரைத் தேக்கி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தற்போது முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் 142 அடியை எந்த நேரத்திலும் எட்டிவிடும் நிலையில் இருக்கிறது முல்லைப் பெரியாறு அணை. இந்த நிலையில் கேரளா முதல்வர் உம்மன் சாண்டி தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதில் அணையில் அதிகளவு நீர் தேக்குவதால் அணையைச் சுற்றியுள்ள மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் உயிர் பயத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாண்டி வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று அனுப்பிய கடித விவரம்:












Click it and Unblock the Notifications