விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தீவிரவாதிகளா?: மக்களிடம் பீதி கிளப்ப வேண்டாம்- விஜயகாந்த்
சென்னை: முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் செயல்பட்டவர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலை புலிகளின் ஆதரவு இயக்கங்களால் முல்லை பெரியாறு அணை தகர்க்கப்படும் என்றும், இதற்காக மத்திய அரசின் தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தீவிரவாதிகளாக சித்தரிப்பு
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் சொல்லியிருப்பது தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத கரும் புள்ளி. பாவம் ஓரிடம், பழி ஓரிடம் என்பதைப்போல இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் செயல்பட்டவர்களை தீவிரவாதிகள் என சித்தரித்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதுபோன்ற செயலில் ஈடுபடும் அமைப்பினுடைய பெயரை தமிழக அரசால் வெளியிடமுடியுமா.

தமிழர்களுக்கு துரோகம்
பெரியாறு அணை பிரச்சனையில் வெற்றி பெற்றதாக கூறிக்கொண்டு, விவசாயிகளின் பெயரில் பாரட்டு விழாவை நடத்திக் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டையே கொச்சைபடுத்தும் வகையில், மத்திய புலனாய்வு துறையின் ஆய்வு அறிக்கையை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது தமிழர்களுக்கு செய்துள்ள துரோகம்.

சுமூக தீர்வு காணுங்கள்
முதல்வர் ஜெயலலிதா இது போன்று மக்களை பீதிக்கு உள்ளாக்கி, அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்திக்கொண்டு, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சுமுக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் விஜயகாந்த் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

தீவிரவாத அச்சுறுத்தல்
மத்திய புலனாய்வுத்துறை ஆய்வு அறிக்கையில் முல்லைப்பெரியாறு அணையை குறிப்பிட்டு எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லை என்று கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி கூறியுள்ளார். ஆனால் தமிழக அரசு இதுபோன்று மக்களை பீதிக்குள்ளாக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications