Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முல்லைப் பெரியாறு அணை 142 அடியை எட்டுகிறது... தேனிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

கம்பம்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று 142 அடியை எட்டும் நிலையில் இருக்கிறது. இதனால் தேனி மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் எந்த நேரத்திலும் 142 அடியை எட்டும் நிலையில் உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மே 7-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 17-ந் தேதி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு நீர் தேக்கப்பட்டது.

Mullai Periyar water level at 141.7 ft

இந்த ஆண்டும் முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தற்போது 141.7 அடியாக உள்ளது. அப்பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்வதால் எந்த நிமிடத்திலும் 142 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டிவிடும்.

அப்படி 142 அடியைக் கடந்து விட்டால் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்கள் வழியாக கேரள பகுதிக்கு நீர் திறக்க வேண்டும். இப்படி வெளியேறும் நீர் கேரள பகுதியில் சென்று இடுக்கி அணையில் சேரும்.

இதைத் தவிர்க்க நேற்று இரவு முதல் அணையில் இருந்து கூடுதல் நீர் உடனடியாக திறந்து விடப்பட்டது. நேற்று இரவு முதல் 1,400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால் முல்லைப் பெரியாற்றின் கரையோரம் தேனி மாவட்டம் லோயர்கேம்பிலிருந்து வைகை அணை வரை வாழும் மக்களுக்கு தமிழக பொதுப்பணித்துறையின் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+