For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகை ராதாவின் அந்தரங்க செல்போன் பேச்சு.. ஆடியோ வெளியிட்ட முனிவேலு மனைவி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உமாதேவி என்ற பெண், கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதா மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், 'சுந்தரா டிராவல்ஸ்' படத்தின் கதாநாயகியான நடிகை ராதா எனது கணவரை அபகரித்துக்கொண்டார். அவரிடம் இருந்து, எனது கணவரை மீட்டு தாருங்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனு மீது தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணன் விசாரணை நடத்தினார். அப்போது, உமாதேவி துணை கமிஷனர் சரவணனிடம் மீண்டும் இன்னொரு புகார் மனுவை கொடுத்தார்.

நடிகை ராதா செல்போனில் பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக அந்த புகார் மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த புகார் மனுக்களுக்கு நடிகை ராதா எவ்வித பதிலும் தெரிவிக்காமல் இருந்தார்.

ரவுடி மிரட்டல்

ரவுடி மிரட்டல்

நேற்று முன்தினம் சென்னை வந்த நடிகை ராதா, புதிய திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். தன்னிடம் ரவுடி வைரம் என்பவர் செல்போனில் கொலை மிரட்டல் விடுப்பதாக, பேட்டி கொடுத்த அவர், ரவுடி செல்போனில் மிரட்டி பேசிய பேச்சு பதிவான ஆடியோ பதிவையும் வெளியிட்டார்.

கமிஷனர் அலுவலகத்தில் புகார்

இதையடுத்து, நடிகை ராதா நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று. தன் மீது புகார் கொடுத்த உமாதேவி மீதும், செல்போனில் பேசி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி வைரம் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

 மன்மதன் இல்லை

மன்மதன் இல்லை

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘'உமாதேவியின் கணவர் முனிவேலு, எனக்கு சிறு வயது முதல் பழக்கமானவர். அந்த வகையில் நட்பு ரீதியாக அவரிடம் பேசி, பழகி வந்தேன். இதை தவறாக எடுத்துக்கொண்டு முனிவேலை நான் அபகரித்து வைத்துக்கொண்டதாக, முனிவேலின் மனைவி உமா என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார். முனிவேலை அபகரித்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவர் முகேஷ் அம்பானி அல்ல. அவரை நான் காதலிக்கும் அளவுக்கு, பெரிய மன்மதனும் அல்ல" என்று தெரிவித்தார்.

7 வருடம் வாழ்ந்தவர்

7 வருடம் வாழ்ந்தவர்

என் மீது புகார் கொடுக்க, உமாவை தூண்டிவிட்டவர் பிரபல தொழில் அதிபர் ஆவார். அந்த தொழில் அதிபருடன் நான் 7 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன். அவர் மீது நான் ஏற்கனவே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். பின்னர் அவரோடு சமாதானமாகி, புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன்.

2வது திருமண முயற்சி

2வது திருமண முயற்சி

அந்த தொழில் அதிபர் தற்போது 2வது திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். அவரை திருமணம் செய்யவிடாமல் நான் தடுத்து வருகிறேன். அதனால் அந்த தொழில் அதிபர்தான், எனக்கு எதிராக உமாவை தூண்டிவிட்டு, புகார் கொடுக்க வைத்துள்ளார். அந்த தொழில் அதிபர் தூண்டுதலின் பேரில்தான், ரவுடி வைரம் என்பவர் எனக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றும் ராதா தெரிவித்தார்.

உமாதேவி வந்தார்

உமாதேவி வந்தார்

இதன்பிறகு, சிறிது நேரத்தில், நடிகை ராதா மீது முதலில் புகார் கொடுத்த, உமாதேவி போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அவர் புதிய புகார் மனு ஒன்றை, நடிகை ராதா மீது பதிவு செய்தார். நடிகை ராதா, தன்னை சைக்கோ பெண்மணி என்றும், கந்து வட்டி தொழில் செய்பவள் என்றும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேட்டி கொடுத்தார். அவரால் தனக்கும், தனது 2 மகள்களுக்கும் ஆபத்து இருப்பதாகவும் புதிய புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.

கணவருடன் ஆபாச பேச்சு

கணவருடன் ஆபாச பேச்சு

மேலும் தனது கணவருடன் நடிகை ராதா செல்போனில் பேசிய பேச்சு பதிவான ஆடியோ கேசட் ஒன்றையும் உமா வெளியிட்டார். மேலும் ராதாவின் செல்போன் பேச்சு உரையாடல், வாட்ஸ்-அப்பிலும் வெளியானது. அந்த உரையாடலில் நடிகை ராதா, உமாதேவியின் கணவரோடு பேசுவது பதிவாகி உள்ளது. உமாதேவியின் கணவர், ராதாவுடன் மிகவும் ஆபாசமாக படுக்கை அறை அந்தரங்கம் பற்றி பேசுவது போன்ற உரையாடலும் அதில் உள்ளது.

வாபஸ் வாங்க சொல்கிறார்

வாபஸ் வாங்க சொல்கிறார்

உமாதேவி கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வைக்கவேண்டும் என்று உமாதேவியின் கணவரை நடிகை ராதா வற்புறுத்தும் உரையாடல் அதில் வருகிறது. இந்த செல்போன் பேச்சு உரையாடல் விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Munivelu wife released an audio in which actress Radha spoke with her husband in sexy manner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X