முரசொலி பவள விழா வாழ்த்தரங்கம்.. கமல், ரஜினி, வைரமுத்து, இந்து ராம் பங்கேற்பு!
முரசொலி பவள விழா வாழ்த்தரங்கத்தில் நடிகர் கமல் ஹாசன், கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை: முரசொலி பவளவிழாவின் வாழ்த்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதில், நடிகர் கமல் ஹாசன், கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி வெளியாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. முரசொலியின் பவள விழாவின் வாழ்த்தரங்கம் சென்னை கலைவாரணர் அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் கமல், கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் இந்து ராம், நக்கீரன் ஆசிரியர் கோபால், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தினமலர் ஆசிரியர் ரமேஷ், டெக்கன் கிரானிக்கல் ஆசிரியர் பகவான் சிங், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம், ஆனந்த விகடன் மேலண் இயக்குநர் பா. சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில், முரசொலி ஆசிரியர் செல்வத்திற்கு மு.க ஸ்டாலின் நினைவு பரிவு வழங்கினார். மேலும், அமிர்தம், சொர்ணம், சண்முகநாதன், திருநாவுக்கரசு, கலாநிதிமாறன், தயாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ் பாரதி ஆகியோருக்கும் நினைவுப் பரிசை மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் பிரபு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications