மறைந்தும் தொடர்ந்து முரசொலி படித்து வருகிறார் கருணாநிதி!
கருணாநிதி சமாதியில் தினந்தோறும் முரசொலி நாளிதழ் வைக்கப்படுகிறது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் தினந்தோறும் முரசொலி வைக்கப்பட்டு வருவது தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து வருகிறது.
"முரசொலி நாளிதழ்" - திமுகவின் 'குட்டி அரசியல் மேடை'! திமுகவின் சமுதாய அரங்கம்!! கருணாநிதியின் மனசாட்சி!!! தமிழ் இன உணர்வை அரை நூற்றாண்டுக்கும் போற்றி வளர்த்த போர்வாள்!!!

ரத்தமும்-சதையுமான முரசொலி
தன் செல்ல குழந்தையை போல முரசொலியை மார் மீதும், தோள் மீதும் தூக்கி வளர்த்தவர் கருணாநிதி. பிரசுரம் ஆன முதல் நாளிலிருந்து கடைசி அவர் கண்கள் படாத முரசொலி ஏது? தன் ரத்தமும், சதையுமாய் கலந்து வார்த்தெடுத்த முரசொலிக்காகத்தான் கருணாநிதி தன்னை எப்படியெல்லாம் அர்ப்பணித்து கொண்டார். விடிகாலை காலை 4-30 மணி என்றாலே அது முரசொலிக்கான நேரம் அல்லவா?

மழுங்காத வாளின் முனை
தந்தையும்-தனயனும் தனிமையில் கொஞ்சி விளையாடும் நேரமல்லவா? மனத்தாங்கலாகட்டும், மகிழ்ச்சியாகட்டும், கற்பனையாகட்டும், கனவாகட்டும், முடிவாகட்டும், எழுச்சியாகட்டும்... எல்லாவற்றையும் கொட்டிவிட உதவிய தோழனல்லவா? திராவிட இயக்கத்தின் போர்வாள் என்றாரே.. அந்த வாளின் முனை ஒருபோதும் மழுங்காமல் பார்த்து கொண்டவர் கருணாநிதிதானே?

சமாதியில் முரசொலி
தன் ரத்தத்தில் கலந்துபோன முரசொலியை விட்டு கருணாநிதி இன்று பிரிந்துவிட்டார். ஆனால் தொண்டர்களால் இந்த பிரிவினை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே... அவர்களால் இந்த ஆதங்கத்தை தணிக்க முடியவில்லையே... கருணாநிதி இல்லாத முரசொலியை கற்பனையில் கொண்டு வர முடியவில்லையே... அதனால்தானே தினமும் தொண்டர்கள் கருணாநிதி சமாதியில் தினசரி முரசொலியை வைத்து விட்டு வருகிறார்கள்.
|
திருப்தியின் வெளிப்பாடு
இப்படி கருணாநிதி தலைமாட்டில் முரசொலி வைக்கப்படுவதை சிலர் மூடநம்பிக்கை என்கின்றனர், சிலர் பகுத்தறிவுவாதியிடம் செய்யக்கூடிய காரியமா இது என்கின்றனர். சிலர், கருணாநிதி என்ன ஆவியாக வந்து படிக்க போகிறாரா என கேட்கின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒரே பதில்... கருணாநிதி சமாதியில் முரசொலி வைக்கப்படுவது தொண்டர்களின் திருப்தியின் வெளிப்பாடு.

இயற்கைக்குகூட கிடையாது
முரசொலிக்கும்-கருணாநிதிக்கும் உள்ள நெருக்கம் ஏதாவது ஒரு ரூபத்தில் ஒன்றுகலந்துதான் இருக்கும். அதை பிரித்து பார்க்கும் உரிமை இயற்கைக்கூட கிடையாது.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications