இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் உடல் தகனம்: திரையுலகினர் கண்ணீருடன் பிரியாவிடை!
உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்றுக் காலமான கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சென்னை: மறைந்த கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணவின் உடல் இன்று பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா நேற்று மாலை மரணமடைந்தார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.

மறைந்த பாலமுரளி கிருஷ்ணா உலகளவில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 25ஆயிரம் கச்சேரிகளுக்கு மேல் பங்கேற்றுள்ளார். ஏராளமான திரைப்பட பாடல்களையும் பாடியுள்ள பாலமுரளி கிருஷ்ணா சிறந்த இசையமைப்பாளரும் ஆவார். பாலமுரளி கிருஷ்ணாவின் சாதனைகளை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதையும் அவர் பெற்றுள்ளார்.
சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடகருக்காக 2 முறை தேசிய விருதுகளையும் பாலமுரளி கிருஷ்ணா பெற்றுள்ளார். சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி போன்ற பட்டங்களுக்கும் அவர் சொந்தக்காரர் ஆவர்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட பாலமுரளி கிருஷ்ணாவின் உடலுக்கு திரை மற்றும் இசை உலகினர், அரசியல் கட்சியினர், பொது மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் கோபாலபுரம் வீட்டிலிருந்து பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இறுதி சடங்குக்குப் பின் பாலமுரளி கிருஷ்ணாவின் பூதஉடல் தகனம் செய்யப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications