Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு –தலைமைப் பொறியாளர் செந்திலின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் தலைமை பொறியாளர் செந்திலின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பொறியாளர் செந்திலின் ஜாமின் மனு நெல்லை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வந்தது.

Muthukumarasamy case: Chief Engineer senthil’s Bail plea dismissed

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொறியாளர் செந்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களில் செந்தில் மட்டும் ஜாமின் கோரி மனு செய்திருந்தார். இந்த வழக்கு நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வாதாடிய செந்திலின் வழக்கறிஞர், "அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஜாமீன் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார். ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதாலும், சிறைக்குள்ளேயே மருத்துவ வசதிகள் இருப்பதாலும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து நெல்லை மாவட்ட நீதிபதி ரசீத் அகமது, செந்திலின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரின் நீதிமன்றக் காவல் நாளையோடு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+