முன்னாள் ஆசிரியர் கே.பாலச்சந்தருக்கு அஞ்சலி செலுத்திய அரசுப் பள்ளி!
திருவாரூர்: மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் முன்பு ஆசிரியராகப் பணியாற்றிய, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களும் ஆசிரியர்களும், பாலச்சந்தர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கே.பாலசந்தர் 1959-ஆம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றினார். இங்கு பணியாற்றிய போதே இப்பகுதியில் ஏராளமான மேடை நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். அதில் நல்ல வரவேற்பும் பெற்றார். நல்ல இயக்குநராகப் பெயர் பெற்ற பாலச்சந்தர், ஆசிரியர் பணியில் இருந்தபோது நல்ல ஆசிரியராகவும் திகழ்ந்துள்ளார்.

ஆசிரியராகப் பணியாற்றிய சமயத்தில்தான் அவர் சென்னையில் வேலை கிடைத்து பணி மாறினார். பின்னர் திரையுலகப் பாதைக்கு மாறி வந்தார். சாதனை படைத்தார், சகாப்தம் ஆனார்.
இந்த நிலையில் புதன்கிழமை கே.பாலச்சந்தர் பணியாற்றிய அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அவரது மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பலரும் இறங்கல் தெரிவித்து பேசினார்கள். மேலும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் பலரும் கலந்துக்கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி நீண்ட நேரம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் த.மு.எ.ச நிர்வாகி சுப.சிதம்பரம், தெற்குகாடு கிராம நிர்வாகி சதீஸ் குமார், ஆசிரியர்கள் சஞ்சய், ராஜாராம், ஆசிரியைகள் கலைச்செல்வி, அயிஷா பர்வீன், தெய்வானை உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
நல்ல இயக்குநராக, இயக்குநர் சிகரமா்க உயர்ந்த கே.பாலச்சந்தர், ஆசிரியர் கே. பாலசந்தராகவும் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து வருவது அவருக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications