நான் நல்லாட்சி புரிந்தது சசிகலாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது- ஓபிஎஸ்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது நற்பெயரை காப்பாற்றும வகையில் நான் செயல்பட்டது சசிகலாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் பெயரை காப்பாற்றும் வகையில் செயல்பட்டது சசிகலாவுக்கும் அவரது உறவினர்களுக்கும எரிச்சலை ஏற்படுத்தியது என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டுடைத்தார். இதனால் சசிகலா தரப்பின் மிரட்டல் காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீரென ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று திடீரென தியானம் செய்தார். 40 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இந்த தியானத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது சசிகலா தரப்பு கொடுத்த இடையூறுகளையெல்லாம் அவர் போட்டுடைத்தார். ஜெயலலிதாவின் நற்பெயரை காக்கும் வகையில் நான் நல்லாட்சி புரிந்தது சசிகலாவுக்கும் சசிகலாவின் உறவினர்களுக்கும் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மற்றவர்கள் முன்னிலையில் சசிகலா தரப்பினர் இகழ்ச்சியாக பேசியதாகவும் அவமானப்படுத்தியதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் சசிகலா மிரட்டியே பொதுச்செயலாளர் பதவியையும் முதல்வர் பதவியையும் பெற்றுள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.