காவிரி: தாம்பரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 30 பேர் கைது
தாம்பரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்திலும் அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர் போராட்டங்களால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர் இன்று காலை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். புறநகர் மின்சார ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபடமுயன்ற 30 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications