ஜனாதிபதியை சந்தித்தால் மட்டும் மாற்றம் நடந்து விடுமா? கேட்கிறார் சீமான் - வீடியோ
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக குடியரசுத் தலைவரை சந்தித்தால் மட்டும் என்ன நடந்துவிடப்போகிறது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

மதுரை: குடியரசுத் தலைவரை சந்தித்தால் மட்டும் ஆட்சி மாற்றம் நடைபெற்றுவிடுமா? என நாம் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறி 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மட்டுமில்லாது, எதிர்க்கட்சியைச் சேர்ந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் ஆளுநரிடம் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என மனு அளித்தனர்.

ஆளுநர் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என காத்திருந்த நிலையில், 'அது உள்கட்சி விவகாரம்; நான் சட்டப்படி தலையிட முடியாது' என அவர் கூறிவிட்டார்.
இந்த நிலையில் எதிர்கட்சியான திமுகவைச் சேர்ந்த எம்.பிகள் டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்து உள்ளனர். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், ஆளுநரை சந்தித்து என்ன நடந்துவிட்டது? அதேபோல் தான் குடியரசுத் தலைவரை சந்திப்பதால் மட்டும் தமிழக அரசியலில் மாற்றம் நடந்துவிடப்போவதில்லை.
வேண்டுமானால், குடியரசுத் தலைவரை சந்தித்தோம். அவர் எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாகச் சொன்னார் என சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அந்த சந்திப்பால் ஒன்றும் நிகழப் போவதில்லை என்பதுதான் உண்மை என சீமான் கூறினார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications