ஆர்கே.நகரில் நாங்கள் போட்டியிடுகிறோம்... சீமான் அறிவிப்பு
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக மீனவரை இலங்கை கடறப்டை சுட்டிருந்தால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் அவர் கூறினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வந்த நெடுவாசல் போராட்டத்தில் கலந்து கொண்ட சீமான் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் போராட்டமே வாழ்கையாக உள்ளது என வேதனை தெரிவித்தார்.

மீனவரை இலங்கை கடற்படை சுடவில்லை என மறுக்கிறது. அப்படி என்றால் இந்தியா கடற்படை சுட்டதா? என கேள்வி எழுப்பிய சீமான் சீன கடற்படை மீனவரை சுட்டு இருந்தால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து உள்ளது என்று அவர் எச்சரித்தார்.
மேலும் ஆர்கே.நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்றும் அவர் கூறினார். தூய அரசியலை நடத்தும் நோக்கில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நாம் தமிழர் கட்சி எதிர்கொள்ளும் என்றும் சீமான் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications