கடலூரில் கர்நாடக அரசு பேருந்து சிறைபிடிப்பு.. நாம் தமிழர் கட்சியினர் அதிரடி
கடலூரில் கர்நாடக அரசு பேருந்தை சிறைபிடித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கர்நாடக அரசு பேருந்தை சிறைபிடித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடலூரில் கர்நாடக அரசுப் பேருந்து சிறைபிடிக்கப்பட்டது.

கர்நாடக அரசுப் பேருந்தை நாம் தமிழர் கட்சியினர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கர்நாடக அரசு பேருந்தின் கண்ணாடியையும் அவர்கள் உடைத்தனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆரம்பம் முதலே கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications