அனிதாவுக்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்- மதுரை ரயில் நிலையம் முற்றுகை!
அனிதாவுக்கு நீதி மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை/புதுச்சேரி: அனிதா மரணத்துக்கு நீதி கோரி மதுரை மற்றும் புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியினர் இன்றும் போராட்டம் நடத்தினர்.
அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

தமிழகத்தின் பல இடங்களில் கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணித்து விட்டு மாணவர்கள் நீதி கோரி போராடி வருகின்றனர். இதனிடையே மதுரையில் ரயில் நிலையத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலையில் இருந்து ரயில் நிலையம் நோக்கி நாம் தமிழர் கட்சியினர் பேரணியாக சென்றனர். ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது ரயில் நிலையத்துக்குள் நுழைந்து ரயில்களை மறிக்கவும் அவர்கள் முயன்றனர். ஆனால் போலீசார் நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்தினர்.
இதேபோல் புதுவையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications