For Daily Alerts
Just In
லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது: சீமான் அறிவிப்பு
சென்னை: லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு பிரதான அரசியல் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு வியூகங்கள் வகுத்து வருகின்றன. ஆனால் இத்தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும் சீமான் அறிவித்துள்ளார். மேலும் 2016 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
English summary
Naam Thamizhar party leader Seeman said his party not to contest Lok Sabha polls.
Story first published: Sunday, February 2, 2014, 11:27 [IST]