அச்சுறுத்தும் ''நாடா'' புயல்.. கடலுக்குள் செல்லாமல் ஒதுங்கி ஓய்வெடுத்த மீனவர்கள்
''நாடா'' புயல் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடற்கரையோரங்களில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ''நாடா'' புயலால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் மீன்பிடித் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ''நாடா'' புயல் வலுவிழந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு அருகே 210 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

நாளை கரையைக் கடக்கும்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை கடலூர் - வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றம்
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் பலத்தக் காற்றும் வீசிவருகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

வேதாரண்யம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடலூர், புதுச்சேரி, சென்னை காசிமேடு உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் கடலுக்கு செல்ல வில்லை.

சென்னை
சென்னையில் படகுகள் அனைத்தும் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடற்கறைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடலோரங்களில் தொடர்ந்து கொந்தளிப்பு நிலவி வருவதால் புயல் கரையைக் கடக்கும் வரை மீனவர்கள் கடலுக்குள் போக மாட்டார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications