மகாமகம் தீர்த்தவாரி: கும்பகோணத்தில் ஆசி வழங்கும் நாக சாதுக்கள்
தஞ்சாவூர்: மகாமகப் பெருவிழாவின் தீர்த்தவாரியில் பங்கேற்பதற்காக முதன்முறையாக இமயமலை, காசியிலிருந்து 15 நாக சாதுக்கள் கும்பகோணத்திற்கு வந்து குடில் அமைத்து தங்கி யாகம் செய்வதோடு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகின்றனர்.
வடஇந்தியாவில் நடைபெறும் கும்பமேளாவின் போது, நாக சாதுக்கள், அகோரிகள், துறவிகள் திரளாக வந்து புனித நீராடி ஆசீர்வாதம் வழங்குவார்கள். இவர்கள் இமயமலை, காசி, வாரணாசி ஆகிய இடங்களில் தான் வசிப்பார்கள்.
வடஇந்தியாவில் நடைபெறும் கும்பமேளாவின் போது 48 நாட்களும் அவர்கள் தவம் இருப்பார்கள். தவமிருக்கும் இடத்தில் யாகம் நடத்தி அதில் கிடைக்கும் சாம்பலை தங்களது உடலில் இவர்கள் பூசிக்கொள்வது வழக்கம்.

துறவிகள் மாநாடு
கும்பகோணம் மாகமகத் திருவிழாவையொட்டி இந்தாண்டு முதன்முறையாக துறவிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கும், மகாமகக் குளத்தில் புனித நீராடுவதற்கும் நாடெங்கிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறவிகள், சாதுக்கள் வந்துள்ளனர்.

நாக சாதுக்கள்
இதில், முதன்முறையாக இமயமலை, காசியிலிருந்து 15 நாக சாதுக்கள் வந்துள்ளனர். இவர்கள் கோவிந்தபுரம் பாண்டுரங்க ஆசிரமத்தின் அருகே புனித நதியான காவிரியின் துணை ஆறான வீரசோழன் ஆற்றின் கரையோரத்தில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். அவர்களே உணவு சமைத்து சாப்பிடுகின்றனர்.

யாகம் செய்யும் சாதுக்கள்
மேலும், கூடாரத்திலேயே தவமிருந்த அவர்கள் யாகம் நடத்தியதுடன், சாம்பலை உடலில் பூசிக்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகின்றனர். தீர்த்தவாரி தினமான இன்று மகாமகக் குளத்தில் புனித நீராட உள்ளனர்.

பஞ்சமூர்த்திகள் பவனி
காலை 9 மணிக்கு விநாயகர், சுப்ரமணியர், கும்பேஸ்வரர், மங்களாம்பிகை, சண்டீகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனத்தில் புறப்பட்டு மகாமக குளத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். இரவு 7 மணிக்கு மகாமக குளத்தில் இருந்து சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசனத்தில் புறப்பட்டு கோயிலுக்கு வந்து சேருகின்றனர். 23ம் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சியும், 24ம் தேதி விடையாற்றி நிகழ்ச்சியும், 25ம் தேதி சுத்தாபிஷேகமும், 108 கலச அபிஷேகமும் நடைபெற்ற பின்னர் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மூலஸ்தானம் சென்றடைகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications