நாகை பொறையாறில் போக்குவரத்துக் கழக கட்டிட மேற்கூரை இடிந்து விபத்து- உயிரிழப்பு 9ஆக ஆதிகரிப்பு
நாகை பொறையாறில் அரசு போக்குவரத்துக் கழக கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ள்ளது.
Recommended Video

நாகப்பட்டினம்: பொறையாறில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையின் மேற்கூரை கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
தரங்கம்பாடியை அடுத்த பொறையாரில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பனிமனையில் ஓய்வறை உள்ளது. பணி முடிவடைந்த நடத்துநர்கள், ஓட்டுநர்கள் 20 பேர் இந்த ஓய்வறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

மேற்கூரை இடிந்தது
இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த ஓய்வறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி தொழிலாளர்கள் உயிருக்குப் போராடினர்.

8 பேர் பலி
சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியாகினர்.

காரைக்காலில் ஒருவர் பலி
இடிபாடுகளில் சிக்கிய சிலர் மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்ந்த மூவரில் வெங்கடேசன் என்ற ஊழியரும் பலியானார்.

ஓஎஸ் மணி பார்வையிட்டார்
இதையடுத்து பொறையாறு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளத்து. முன்னதாக விபத்து நடந்த இடத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நேரில் சென்று பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications