'அம்மா' மாதிரியே நக்மாவும் செம கலருப்பா: மயிலாப்பூர் வாக்காளர்கள்
சென்னை: சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜனுக்கு ஆதரவாக நடிகை நக்மா வாக்கு சேகரித்தார்.
சட்டசபை தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கராத்தே தியாகராஜன் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடையும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீயாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கராத்தே தியாகராஜனும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நக்மா
கராத்தே தியாகராஜனுக்கு ஆதரவாக நடிகையும், மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நக்மா வியாழக்கிழமை மயிலாப்பூரில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அம்மா மாதிரியே
நக்மா பிரச்சாரம் செய்வது குறித்து அறிந்த அவரது ரசிகர், ரசிகைகள் அவரை காண திரண்டனர். ஜெயலலிதா மாதிரியே நக்மாவும் நல்ல கலராக இருக்காங்க என்று ரசிகர், ரசிகைகளை கூறியுள்ளனர்.
|
ட்விட்டர்
கராத்தே தியாகராஜனுக்கு ஆதரவாக மயிலாப்பூரில் பிரச்சாரம் செய்தேன் என்று நக்மா ட்விட்டரில் தெரிவித்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

குஷ்பு
வியாழக்கிழமை நக்மா பிரச்சாரம் செய்தார். இன்று கராத்தே தியாகராஜனுக்கு ஆதரவாக நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு மயிலாப்பூரில் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications