நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க கோர்ட் மறுப்பு.. தேசதுரோக வழக்கும் ரத்து.. கோர்ட் அதிரடி!
Recommended Video
சென்னை: நக்கீரன் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான ஆர். கோபால் இன்று கைது செய்யப்பட்டார். அவரது கைது அகில இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நக்கீரன் கோபால் கைதை எதிர்த்து பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவரைப் பார்க்க வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் போலீஸார் கைது செய்து அப்புறபப்படுத்தி விட்டனர்.
இந்தப் போரில் வெல்ல உதவிய ஊடக நண்பர்களுக்கும், வக்கீல்களுக்கும் நன்றி - நக்கீரன் கோபால்
புலனாய்வு செய்து வெளியிட்ட செய்திக்காக என்னைக் கைது செய்வதாக கோர்ட்டில்தான் போலீஸார் தெரிவித்தனர் - கோபால்
திறமையான வகையில் செய்தியை எடுத்துரைத்து வாதாடிய வக்கீல்களுக்கு நன்றி - நக்கீரன் கோபால்
இந்து ராம் எனக்காக நேரடியாக வந்து நீதிபதியிடம் வாதாடினார் - நக்கீரன் கோபால்
ஊடகப் பிரதிநிதியாக அவரை அனுமதிப்பதாக நீதிபதியும் கூறினார் - நக்கீரன் கோபால்
ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் ஊடக சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும் -கமல்
நக்கீரன் ஆசிரியர் திரு. கோபால் அவர்களின் கைதை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது.#MakkalNeedhiMaiam pic.twitter.com/IVsmdqnJNe
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) October 9, 2018
போலீஸாரையும், நீதிபதிகளையும் கொச்சைப்படுத்தியவர் எச். ராஜா- மு.க.ஸ்டாலின்
நக்கீரன் கோபால் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
போலீஸ் துணையோடு எச். ராஜா வலம் வந்ததை நாடே பார்த்தது - மு.க.ஸ்டாலின்
பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின்
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறிய எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை - மு.க.ஸ்டாலின்
கோபாலை விடுவிக்காவிட்டால் மிக விபரீதமான விளைவுகளை இந்த அரசு சந்திக்கும் - ஸ்டாலின்
போலீஸாரையும், நீதிபதிகளையும் கொச்சைப்படுத்தியவர் எச். ராஜா- மு.க.ஸ்டாலின்
நக்கீரன் கோபால் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
போலீஸ் துணையோடு எச். ராஜா வலம் வந்ததை நாடே பார்த்தது - மு.க.ஸ்டாலின்
பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின்
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறிய எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை - மு.க.ஸ்டாலின்
கோபாலை விடுவிக்காவிட்டால் மிக விபரீதமான விளைவுகளை இந்த அரசு சந்திக்கும் - ஸ்டாலின்
மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார் நக்கீரன் கோபால்
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம்
ஓமந்தூரார் வளாக அரசு மருத்துவமனைக்கு நக்கீரன் கோபால் அழைத்துச் செல்லப்படுகிறார்
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் அல்லிக்குளம் வளாகம் கோர்ட்டில் கோபால் ஆஜர்படுத்தப்படுவார்
நிர்மலா தேவி வழக்கு குறித்து எழுதினால் கைது செய்வதா - இளங்கோவன்
கோபால் கைது பேச்சுரிமை, எழுத்துரிமையை நசுக்கும் செயல் இது - இளங்கோவன்
தமிழக ஆளுநர் என்னமோ தமிழகத்தின் பேரரசர் போல நடந்து வருகிறார் - இளங்கோவன்
அனாவசியமாக பல பகுதிகளுக்கு செல்கிறார், ஆய்வு செய்கிறேன் என்கிறார் - இளங்கோவன்
ஒரு நபர் கமிஷன் போட்டார்கள்.. அது என்ன ஆனது என்றே தெரியவில்லை - இளங்கோவன்
ஆளுநர் மாளிகைக்கும், நிர்மலா தேவிக்கும் தொடர்பு உள்ளதா என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது - இளங்கோவன்
இதுகுறித்து மத்திய அரசு விசாரித்து தவறு நடந்திருந்தால் தவறு செய்தவரை உள்ளே தள்ள வேண்டும் - இளங்கோவன்
நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத் தூண்டும் மத்திய பா.ஜ.க அரசும், தமிழக ஆளுநரும் கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அடிமை அரசை பயன்படுத்துவது வெட்கக்கேடானது.
— M.K.Stalin (@mkstalin) October 9, 2018
உடனடியாக நக்கீரன் கோபால் அவர்களை விடுதலை செய்க!
சிந்தாதிரிப்பேட்டையில் மதிமுகவினரும் போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு
பத்திரிகையாளர்களும் திரண்டு போராட்டத்தில் குதித்துள்ளனர்
#Flashnews : பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைதை கண்டித்தும், பார்க்க அனுமதிக்காத காவல் துறையினரின் அராஜக போக்கிற்காக திராவிட இயக்கத்தின் போர்வாள் வைகோ அவர்கள் சிந்ததிரிபேட்டை காவல்துறை அலுவலகத்தின் வெளியே வெயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் #NakkheeranGopal pic.twitter.com/wfFc9hrUPA
— Oneindia Tamil (@thatsTamil) October 9, 2018