'பூனைக்கு மணி கட்டிய நக்கீரன்'.. வெளியானது நக்கீரன் கோபால் ரிமாண்ட் ரிப்போர்ட்!
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது தொடர்பான ரிமாண்ட் ரிப்போர்ட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது தொடர்பான ரிமாண்ட் ரிப்போர்ட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக, ஆளுநரின் தனி செயலாளர் அளித்த புகாரின் பேரில் நக்கீரன் ஆசிரியர் கோபால் இன்று கைது செய்யப்பட்டார்.
புனே செல்ல இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த நக்கீரன் ஆசிரியர் கோபாலை காவல் உதவி ஆணையர் விஜயகுமார் விசாரித்தார். காலை 7 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின் கோபாலை காவல்துறையினர் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்
இதனையடுத்து நக்கீரன் கோபால் மீது சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் 124-A பிரிவில் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நக்கீரன் கோபால் எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

ரிமாண்ட் ரிப்போர்ட் தாக்கல்
இதைத்தொடர்ந்து நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது தொடர்பான ரிமாண்ட் ரிப்போர்ட்டை ஜாம்பஜார் காவல் ஆய்வாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் ஆளுநரின் துணைச்செயலாளர் செங்கோட்டையன் கொடுத்த புகாரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூனைக்கு மணி கட்டிய நக்கீரன்
ஏப்ரல் 20-22, 2018 நக்கீரன் வார இதழின் அட்டைப்படத்தில் பூனைக்கு மணி கட்டிய நக்கீரன் பொறியில் சிக்கிய கவர்னர் சிறையில் நிர்மலாவுக்கு ஆபத்து என்ற வாசகத்துடன் தமிழக ஆளுநர் புகைப்படத்தை அச்சிட்டுள்ளார்கள். மேலும் இது சம்பந்தமான விரிவான கட்டுரை செய்தி வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் வலியுறுத்தல்
ரிமாண்ட் ரிப்போர்ட்டின் ஒரு பக்கம் மட்டுமே ஊடகத்தினருக்கு தரப்பட்டுள்ளது. இதனிடையே நக்கீரன் கோபாலை உடனடியாக விடுவிக்குமாறு அனைத்து அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications