சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.. நளினியின் தாயார் ஆனந்த கண்ணீர்!
ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சுப்ரீம்கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்புக்கு நளினியின் தாயார் பத்மாவதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சுப்ரீம்கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்புக்கு நளினியின் தாயார் பத்மாவதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் மனு
இதைத்தொடர்நது 7 பேரையும் விடுதலை செய்ய பேவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

தமிழக அரசே முடிவு செய்யலாம்
இதைத்தொடர்ந்து 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளன் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜுவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது.

அற்புதம்மாள் வரவேற்பு
மேலும் 7 பேரின் விடுதலை பற்றி தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த தீர்ப்புக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பத்மாவதி மகிழ்ச்சி
அதேபோல் நளினியின் தாயார் பத்மாவதியும் சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் உணர்ச்சி ததும்ப தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications