சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் என்ன செய்வீர்கள்?- மனம் திறந்த நளினி
வேலூர்: சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் என் மகளுடன் வசிப்பேன் என ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி பேட்டி அளித்துள்ளார்.
1992-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர்கள் சிறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளனர். இவர்களை விடுவிக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும் அவர்களை மத்திய அரசு விடுதலை செய்ய மறுத்துவிட்டது.

பேட்டி
இதையடுத்து 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என கூறி உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துவிட்டது. இந்நிலையில் நளினி நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு எழுத்து மூலம் அனுபபிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நிச்சயம் விடுதலை
அதில் 28 ஆண்டுகளாக சிறை தண்டனையில் இருந்த போது நிகழ்ந்த சம்பவங்களையும் வலிகளையும் மறக்க விரும்புகிறேன். நாங்கள் நிச்சயம் விடுதலை செய்யப்படுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

உதவும்
மாநில அரசின் உரிமை பாதுகாக்கப்பட்டது பெருமையாக உள்ளது. விடுதலை ஆனவுடன் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன். மகளின் திருமணத்துக்கு மத்திய- மாநில அரசுகள் உதவும் என நம்பிக்கையும் உள்ளது.

முடிவு
விடுதலைக்கு பிறகு முருகனும் மகளுடன் வசிப்பதையே விரும்புகிறார் என்றார் நளினி. இவர்கள் 7 பேர் விடுதலை குறித்து இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications