முரசொலியை யாரும் படிப்பதில்லை.. நமது அம்மா நாளிதழ் படித்தால் பொது அறிவு வளரும்.. ஜெயக்குமார்!
நமது அம்மா நாளிதழ் படித்தால் பொது அறிவு வளரும், என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: நமது அம்மா நாளிதழ் படித்தால் பொது அறிவு வளரும், என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. ரஜினி தனது பேச்சில், சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் தற்போது அதிகம் வேண்டும். பத்திரிக்கை துறை தற்போது சரியாக இல்லை.
முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லிவிடலாம்,கையில் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லிவிடலாம் என்று ரஜினி குறிப்பிட்டார். நடிகர் ரஜினியின் கருத்துக்கு எதிராக இணையத்தில் பலரும் விமர்சனம் வைத்து வருகிறார்கள். இணையத்தில் இதனால் ரஜினி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

என்ன பதில்
இந்த நிலையில் ரஜினியின் கருத்துக்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். அதில், எம்ஜிஆர் நிறைய சாதனைகளை செய்துள்ளார். தமிழக அரசியலை அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் எம்ஜிஆர். அவர் ஆட்சியில் இருந்த போது, திமுகவால் ஆட்சியை பிடிக்கவே முடியவில்லை.

ஜெயக்குமார் கருது
தமிழகத்தில் கண்டிப்பாக நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. நாங்கள் உறுதி அளித்தது போல தேர்தல் நடக்கும். இதில் அதிக மேயர் பதவிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றும்.

முரசொலி கருத்து
முரசொலி இதழை திமுகவினரே படிப்பது கிடையாது. இது திமுகவினருக்கும் தெரியும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியே இதை தமிழருவி மணியனிடம் குறிப்பிட்டு இருக்கிறார். அதைத்தான் தற்போது ரஜினியும் குறிப்பிட்டுள்ளார்.

நமது அம்மா
ஆனால் நமது அம்மா நாளிதழ் அப்படி கிடையாது. அது மிகவும் நல்ல இதழ். நிறைய செய்திகள் அதில் வருகிறது . மக்கள் அதை விரும்பி படிக்கிறார்கள். நமது அம்மா நாளிதழ் படித்தால் பொது அறிவு வளரும், என்று ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications