போதையில் பேருந்துக்கு அடியில் தூக்கம் – சக்கரம் ஏறி கூலித் தொழிலாளி பலி

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் குடித்துவிட்டு தனியார் பேருந்துக்கு அடியில் படுத்து உறங்கிய கூலித் தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டையச் சேர்ந்தவர் கேசவன் என்ற பீடி சுற்றும் கூலித் தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்ததும் அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

சரக்கின் அளவு "ஓவராகிப்" போனதால் நிலை தடுமாறியதால் அவரால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை.

இதன்காரணமாக அவர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு தனியார் நிறுவனத்தின் மாற்றுப் பேருந்தின் அடியில் படுத்துக் கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்ந்துள்ளார்.

போதையும் அதிகமாக இருந்ததால் எதுவுமே நினைவில் இல்லாமல் தூங்கியுள்ளார். இந்நிலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர், கேசவன் படுத்திருப்பதே தெரியாமல் அதிகாலை நான்கு மணியளவில் பேருந்தைக் கிளப்பி உள்ளார்.

அப்போது அடியில் படுத்திருந்த கேசவன் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாராயத்தினால் பரிதாபமாக இறந்து போன கேசவன், யாரெல்லாம் போதைக்கு அடிமையாகி குடும்பத்தினை தவிக்க விடுகின்றார்களோ அவர்களுக்கெல்லாம் ஒரு பாடமாக அமைந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+