For Daily Alerts
Just In
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ராஜதந்திரம் என்பதே தெரியவில்லை- நாஞ்சில் சம்பத்- வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜதந்திரம் அற்ற நடவடிக்கையால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என நாஞ்சில் சம்பத் முதல்வரை விமர்சித்துள்ளார்.
Recommended Video
Nanjil Sampath Slammed PM Modi-oneindia Tamil
தேனி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ராஜ தந்திரம் என்பதே தெரியவில்லை என அதிமுக அம்மா அணி செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணி செய்தி தொடர்பாளரும் தினகரன் ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத் தேனியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,''எடப்பாடி பழனிச்சாமி மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார். எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவருக்கு இல்லை. அவர் தன் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.
அவ்வாறு ஆளுநர் உத்தரவிடாவிட்டால், நீதிமன்றத்தை நாடுவோம். எடப்பாடி பழனிச்சாமிக்கு ராஜதந்திரம் என்பதே தெரியவில்லை. அவருடைய பேதமையினாலும் ராஜ தந்திரமற்ற நடவடிக்கையாலும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எங்களுக்கு 60 எம்.எல்.ஏக்களும் 8 அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.
English summary
Nanjil Sampath critized TN CM Edappadi Palanisamy and said he does not any tantrics to run government.