குஜராத் வளரவே இல்லை.. சென்னை ஏர்போர்ட்டில் நின்று கொண்டு 'நாசா'...!
சென்னை: குஜராத் மாநிலம் இன்னும் ஒரு முழுமையான வளர்ச்சியைப் பெறவே இல்லை, வளர்ச்சி அடையவில்லை என்று சென்னை விமான நிலையத்தில் நின்று மத்திய இணைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னைக்கு வழக்கம் போல விமானத்தில் வந்த நாராயணசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையல், இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வது பற்றி பிரதமர் மன்மோகன்சிங் ஒரு நல்ல முடிவை தெரிவிப்பார்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் நலனை காக்க மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தாக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழக மீனவர்கள் தாக்கபடுவதை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளபடும்.
குஜராத் மாநிலம் இன்னும் முழுமையான வளர்ச்சி அடையவில்லை. அங்கே விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர். விவசாயிற்க்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அம்மாநிலத்தில் தொழில் வளர்ச்சி மட்டும் தான் வளர்ச்சி அடைந்துள்ளது. குஜராத மாநிலம் மற்ற துறைகளில் இன்னும் முழுமையான வளர்ச்சி அடையவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications