மோடியை குறிவைத்து தாக்குதலா? உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு சம்பவானது குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை இலக்கு வைத்து நடத்தப்பட்டதா என்பது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுகாத்தி எஸ்பிரஸ் ரயிலில் 2 குண்டுகள் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் பலியாகினார். 14 பேர் காயம் அடைந்துள்ளனர். குண்டு வெடிப்பு தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திராவில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து மோடியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே நரேந்திர மோடிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருந்தது. தற்போது இந்த ரயிலும்கூட ஆந்திரா வழியாக செல்லக்கூடியது. இந்த கோணத்திலும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications