சசிகலா கணவர் நடராஜன் அப்பல்லோவில் இருந்து இன்று டிஸ்சார்ஜ்?
சசிகலா கணவர் நடராஜன் அப்பல்லோவில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக இடைக்கால் பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று டிஸ்சார்ஜ் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் சசிகலாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அ.தி.மு.க-வின் சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர் அக்கட்சி எம்.எல்.ஏக்கள்.
இதையடுத்து சசிகலா முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக நடசராஜனிடம் தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்டு நடராசன் சந்தோஷத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார். அப்போது சிறிது நேரத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் மயக்க நிலையை அடைந்துள்ளார் நடராசன்.
பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் நடராஜன். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதற்குரிய சிகிச்சைகளை அளித்து வந்தனர்.
கடந்த இரண்டு தினங்களாக டிஸ்சார்ஜ் ஆக வேண்டும் என்று நடராஜன் மருத்துவர்களிடம் கூறிவந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நடராஜன் டிஸ்சார்ஜ் அரசியல் வட்டாரத்தில் ஒரு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், சசிகலாவுக்கு மேலும் பலம் சேர்க்கும் விசயமாகவும் அது பார்க்கப்படுகிறது.