வைகோவுக்கு 8 வருடமாக இல்லாத ஞானம் இப்போது வந்தது ஏன்.. நத்தம் விஸ்வநாதன் கொக்கரிப்பு
கரூர்: தமிழகத்தில் லெட்டர் பேடு கட்சிகள் மக்கள் சக்தி இருப்பதாக கருதி கொண்டு மதுக்கடைகளை எதிர்க்கிறார்கள். மதுக்கடைகளை அடித்து நொறுக்கி வன்முறை வெறியாட்டம் போடுகிறார்கள். 7 -8 வருடமாக கலிங்கப்பட்டியில் மதுக் கடை இருந்தும் திடீரென வைகோவுக்கு ஞானோதயம் வந்தது ஏன் என்று தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சாடியுள்ளார்.
கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அதிமுக சார்பில் கழக வளர்ச்சி பணி குறித்து செயல்வீரர்கள் - வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் பாப்பாசுந்திரம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மின்சாரதுறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசுகையில், கலிங்கப்பட்டியில் 2009 திமுக ஆட்சி முதல் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. ஆனால் புத்தருக்கு போதி மரத்தில் ஞானோதயம் வந்தது போல் ஏழு எட்டு வருடங்களுக்கு பிறகு தற்போது ஞானோதயம் வந்து வைகோ மதுக் கடைகளை அடித்து நொறுக்கி வன்முறை வெறியாட்டம் போடுகிறார்.

வைகோ, ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழிசை சவுந்தராஜன் ஆகியோர் லெட்டர் பேடு கட்சிகளாக இருந்து கொண்டு ஒரு வார்டு கவுன்சிலராக முடியாதவர்கள் எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று கூறினார்.
நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பேசும் போது இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும் ஒரே மாநிலம் "அம்மா" ஆளும் தமிழகம் மட்டுமே. சட்டம் ஒழுங்கிற்கு ஊறு விளைவிக்கும் யாராக இருந்தாலும் அவர்களை அம்மா கவனித்து கொள்வார்கள் என்றார்.
-
எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டாரே! கஷ்டப்பட்டு சிரிக்கிறார்! அண்ணாமலை உருக்கம்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications