தோண்ட தோண்ட பூதம்... ரூ250 கோடி வங்கி கடன் மோசடியில் நாதெள்ளா ஜூவல்லர்ஸ்!
நாதெள்ளா ஜூவல்லர்ஸ் நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை: கனிஷ்க் நிறுவனத்தை அடுத்து நாதெள்ளா ஜூவல்லர்ஸ் நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 250 கோடி கடன் பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளது.
சென்னை உஸ்மான் சாலையில் உள்ள கனிஷ்க் நிறுவனம் ரூ. 824 கோடியை கடனாக பெற்றுவிட்டு மோசடி செய்துவிட்டதாக பாரத ஸ்டேட் வங்கி புகார் அளித்துள்ளது. இந்நிலையில் அதன் உரிமையாளர் பூபேஷ் குமார் தலைமறைவாகிவிட்டார்.
அந்த வரிசையில் நாதெள்ளா நிறுவனமும் சிக்கியுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு போலி ஆவணங்களை தாக்கல் செய்து ரூ.250 கோடி கடனை பாரத ஸ்டேட் வங்கியில் பெற்று அதை திருப்பி செலுத்தவில்லை .

சிபிஐக்கு புகார்
இதையடுத்து நாதெள்ளா நிறுவன உரிமையாளர் ரங்கநாத குப்தா அவரது மகன்கள் பிரபன்ன குமார், பிரசன்ன குமார் மற்றும் உறவினர் கோட்டா சுரேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பிஐ வங்கி சிபிஐக்கு புகார் கடிதம் அளித்துள்ளது.

75 கோடி மோசடி
இந்நிறுவனத்தில் நகை சேமிப்பு திட்டத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்து வருகின்றனர். நாதெள்ளா நிறுவனம் சுமார் 210 பேரிடம் ரூ.75 கோடி நகை சீட்டு பணத்தை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றியுள்ளது என்பது கடந்த ஆண்டு எழுந்த புகாராகும்.

4 மாதங்களுக்கு முன்பே புகார்
இதனால் தமிழகத்தில் 7 கிளைகளை நடத்த முடியாமல் அந்நிறுவனம் மூடிவிட்டது. கனிஷ்க் தொடர்பான புகாரை போல் நாதெள்ளா மீதான புகாரையும் எஸ்பிஐ வங்கி கடந்த 4 மாதங்களுக்கு முன்பே கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

சிபிஐ விசாரணை
ஆனால் இதுவரை யார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது இந்த விவகாரம் வெளி வந்த நிலையில் சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் எந்தெந்த தொழில் நிறுவனங்களுக்கு எஸ்பிஐ வங்கி கடன் கொடுத்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications