தோண்ட தோண்ட பூதம்... ரூ250 கோடி வங்கி கடன் மோசடியில் நாதெள்ளா ஜூவல்லர்ஸ்!
நாதெள்ளா ஜூவல்லர்ஸ் நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை: கனிஷ்க் நிறுவனத்தை அடுத்து நாதெள்ளா ஜூவல்லர்ஸ் நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 250 கோடி கடன் பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளது.
சென்னை உஸ்மான் சாலையில் உள்ள கனிஷ்க் நிறுவனம் ரூ. 824 கோடியை கடனாக பெற்றுவிட்டு மோசடி செய்துவிட்டதாக பாரத ஸ்டேட் வங்கி புகார் அளித்துள்ளது. இந்நிலையில் அதன் உரிமையாளர் பூபேஷ் குமார் தலைமறைவாகிவிட்டார்.
அந்த வரிசையில் நாதெள்ளா நிறுவனமும் சிக்கியுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு போலி ஆவணங்களை தாக்கல் செய்து ரூ.250 கோடி கடனை பாரத ஸ்டேட் வங்கியில் பெற்று அதை திருப்பி செலுத்தவில்லை .

சிபிஐக்கு புகார்
இதையடுத்து நாதெள்ளா நிறுவன உரிமையாளர் ரங்கநாத குப்தா அவரது மகன்கள் பிரபன்ன குமார், பிரசன்ன குமார் மற்றும் உறவினர் கோட்டா சுரேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பிஐ வங்கி சிபிஐக்கு புகார் கடிதம் அளித்துள்ளது.

75 கோடி மோசடி
இந்நிறுவனத்தில் நகை சேமிப்பு திட்டத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்து வருகின்றனர். நாதெள்ளா நிறுவனம் சுமார் 210 பேரிடம் ரூ.75 கோடி நகை சீட்டு பணத்தை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றியுள்ளது என்பது கடந்த ஆண்டு எழுந்த புகாராகும்.

4 மாதங்களுக்கு முன்பே புகார்
இதனால் தமிழகத்தில் 7 கிளைகளை நடத்த முடியாமல் அந்நிறுவனம் மூடிவிட்டது. கனிஷ்க் தொடர்பான புகாரை போல் நாதெள்ளா மீதான புகாரையும் எஸ்பிஐ வங்கி கடந்த 4 மாதங்களுக்கு முன்பே கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

சிபிஐ விசாரணை
ஆனால் இதுவரை யார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது இந்த விவகாரம் வெளி வந்த நிலையில் சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் எந்தெந்த தொழில் நிறுவனங்களுக்கு எஸ்பிஐ வங்கி கடன் கொடுத்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications