ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு
சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதுக்கோட்டை வடகாடு நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு நெடுவாசல் பகுதி பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் செல்வராஜ் சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் வடகாடு நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன், சேல் ஆயில், சேல் கேஸ் ஆகியவற்றை எடுப்பதை தடுக்க வேண்டும் என்றும், வடகாடு நெடுவாசல் பகுதியினை பாதுகாக்கப்பட்ட வேளாண்மைப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகிறார்.












Click it and Unblock the Notifications