தேசிய கைத்தறி தினம் ரூ.1.5 கோடி செலவில் கொண்டாடப்படும்: ஓ.எஸ்.மணியன்
சென்னை: தேசிய கைத்தறி தினம் ரூ1.5 கோடி செலவில் கொண்டாடப்படும் என சட்டசபையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் கைத்தறித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கைத்தறித்துறை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
கைத்தறித் துறை தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:
-திருச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடியில் கோஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.2 கோடியில் நவீனமயமாக்கப்படும்
-தொழில் நுட்ப ஜவுளி பிரிவிற்கு சிறப்பு கவனம் செலுத்த ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்படும்
-வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அஹிம்சா ரக பட்டுகள் கோஆப்டெக்சில் அறிமுகப்படுத்தப்படும்
-சென்னை, தில்லையடி வள்ளியம்மை பட்டு மாளிகை 2 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்படும்
-சென்னை மற்றும் கோவையில் ரூ.27 லட்சம் செலவில் லூம்வோர்டு விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்
-25 லட்சம் ரூபாய் செலவில் கைத்தறி விற்பனை மேம்பாட்டு பிரிவு அமைக்கப்படும்
-ரூ1.5 கோடி செலவில் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படும்