கடல்சார் வாணிப தினம்… இழுவை கப்பல்களின் அணிவகுப்பு: ரசித்த பொது மக்கள்
நெல்லை: தூத்துக்குடி துறைமுகத்தில் 52வது தேசிய கடல்சார் வாணிப தினம் கொண்டாடப்பட்டதை முன்னி்ட்டு நடைபெற்ற இழுவை கப்பல்கள் அணிவகுப்பினை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5ஆம் தேதி தேசிய கடல்சார் வாணிப தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 52வது தேசிய கடல்சார் வாணிப தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் உள்ள மாலுமிகள் நினைவிடத்தில் வ.உ.சி சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக துணை தலைவர் நடராஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் தூத்துக்குடி துறைமுக தளத்தில் தேசிய கடல் சார் வாணிப தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக தூத்துக்குடி துறைமுகத்தில் இழுவை படகுகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனை பொதுமக்கள் பார்த்து வியந்தனர். பின்னர் துறைமுக சபையில் உள்ள வழிகாட்டி படகுகளான முசல், நல்லதண்ணி மற்றும் இழுவை கப்பல்களான திருவள்ளுவர், தூத்துக்குடி, ஓசியன் என்டர், ஓசியன் பிரேவ் ஆகியவை கடலில் அணிவகுத்து வந்தன. துறைமுக சபை துணை தலைவர் நடராஜன் இழுவை கப்பல்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் கப்பல்களில் ஏற்படும் தீ விபத்துகளின் போது எப்படி தீயை அணைத்து எப்படி மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை விளக்கும் வகையில் இழுவை கப்பல்களில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து காண்பிக்கப்பட்டது.
இதன்பின் இழுவை கப்பல்களான தூத்துக்குடி சார்பில் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த இழுவை கப்பல் செய்த சாகச நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். பின்னர் துறைமுக சபை சார்பாக சிறுவர், சிறுமியருக்கு பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கடல்சார் வாணிப விழாவை முன்னிட்டு துறைமுகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications