நண்பேண்டா.. கைவிடப்பட்ட காங்.குக்கு தோள் கொடுக்க ஓடி வந்த தேசியவாத காங்...!
சென்னை: தமிழகத்தில் தனித்து விடப்பட்ட கட்சி என்று இனி யாரும் காங்கிரஸைக் குற்றம் சாட்ட முடியாது. காரணம், அக்கட்சிக்கும் ஒரு கூட்டாளி கிடைத்து விட்டது.. அதுதான் தேசியவாத காங்கிரஸ்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து போட்டியிட தேசியவாத காங்கிரஸ் கட்சி முடிவு செய்து இருந்தது. ஆனால், காங்கிரஸையே திமுக உதறி விட்ட நிலையில் தேசியவாத காங்கிரஸைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியுமா..
இதனையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில், ராமதாதபுரம் தொகுதியில், அதன் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் ராஜேஸ்வரன் தனியாக போட்டியிட முடிவு செய்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கு திருநாவுக்கரசர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து காங்கிரஸ் தரப்பில், தேசியவாத காங்கிரஸிடம் ஆதரவு கோரியதாக தெரிகிறது.
இதனையடுத்து, தேசியவாத கங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் கூடி இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். முடிவில் தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதிரிக்க தேசியவாத காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
முறைப்படி தங்களது ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு தெரிவி்க்க, சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையமான சத்திய மூர்த்திபவனுக்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சி தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் ராஜேஸ்வரன், மற்றும் தமிழ்நாடு இளைஞரணி மாநில தலைவர் செந்தில் குமார் வாண்டையார் ஆகியோர் தலைமையில் சென்று தங்களது முடிவைத் தெரிவிக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளதாலும், மத்தியில் காங்கிரஸ் அமைச்சரவையில், அதன் தலைவர் சரத்பவார் அமைச்சராக நீடிப்பதாலும், அந்த அடிப்படையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளதாம்.
எப்படியோ கைவிடப்பட்ட கட்சி என்ற அவப் பெயரிலிருந்து ஜஸ்ட் மிஸ் ஆகியுள்ளது காங்கிரஸ்.












Click it and Unblock the Notifications