வாணியம்பாடி அருகே கொட்டிய ஆலங்கட்டி மழை... மகிழ்ச்சியில் ஆட்டம்போட்ட மக்கள்!
வாணியம்பாடி அருகே திடீரென கெட்டிய ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
வேலூர்: வாணியம்பாடி அருகே இன்று பிற்பகல் திடீரென ஆலங்கட்டி மழை கொட்டித்தீர்த்து. பலத்தக் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகம் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. கொளுத்தும் வெயிலோடு அனல் காற்றும் வீசி வருவதால் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.

திருவள்ளூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் நாள்தோறும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது.
சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக மழை பெய்யாத என மக்கள் ஏக்கமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது.
பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து சில் காற்று வீசியது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பல இடங்களில் கொட்டிய ஆலங்கட்டிகளை பொறுக்கி மக்கள் மழையில் ஆட்டம்போட்டனர்.












Click it and Unblock the Notifications