இத்தனை காலமாக ஏன் வாயை மூடிக் கொண்டிருந்தார் ப.சிதம்பரம்?.. நெடுமாறன் காட்டம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 2009-ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, இலங்கைக்கு உறுதுணையாக நின்ற மத்திய அரசில் முக்கிய அங்கம் வகித்தவர் ப.சிதம்பரம்.
அப்போது வாய்மூடி மௌனியாக இருந்து விட்டு, அண்மைக் காலமாக இலங்கைத் தமிழர் நலன் குறித்துப் பேசி வருகிறார். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்தியா ஓயாது என்று சென்னையில் சிதம்பரம் சூளுரைத்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தினை சீர்குலைப்பதற்கான அனைத்து வேலைகளையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டு விட்டது. அந்தத் தருணங்களில் எல்லாம் அவர் எதுவும் பேசாமல் இருந்து விட்டு, தற்போது அதற்கு எதிராகப் பேசுவதில் என்ன பயன் இருக்கப் போகிறது?
தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் களைய இந்தியத்தரப்பில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்காமல், அவர்கள் நலனில் அக்கறை இருப்பது போல் சிதம்பரம் சூளுரைப்பதில் ஒரு பயனும் இல்லை. இந்திய கடற்படைத் தளபதி ஜோஷி இலங்கைக்கு அண்மையில் சுற்றுப்பயணம் செய்திருந்தார். அப்போது இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை செய்ததாகக் கூறப்படுகிறது.
கோத்தபய ராஜபட்ச, இந்தியாவுக்கு கடந்த வாரம் வந்து ரகசிய ஆலோசனை நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இலங்கை ராணுவத்துக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதையெல்லாம் தடுத்து நிறுத்தாமல் வெறுமனே இலங்கைத் தமிழர் நலனுக்காக சிதம்பரம் பேசுவது சரிதானா என்பதை சிந்திக்க வேண்டும். மத்திய அரசை நிர்பந்தித்து அவர்களுக்காக பதவி விலகும் துணிவு சிதம்பரத்துக்கு இல்லாமல் போனது ஏன் என்று சாடியுள்ளார் நெடுமாறன்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications