சென்னைவாசிகளே உங்களுக்கு உதவ இவங்க ரெடி: மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணவு, உடை, போர்வை, போக்குவரத்து வழங்க பலர் முன் வந்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் சென்னை மக்களை ராணுவத்தினர் மீட்டு வருகின்றார்கள். இதுவரை 62 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சக மக்கள் முன்வந்துள்ளனர்.
உதவி குறித்து மக்கள் ட்விட்டரில் தகவல் தெரிவித்து வருகிறார்கள்.
|
உதவி தேவையா?
டப்ளினில் இருந்து பிரார்த்தனை செய்கிறோம். சென்னையில் வெள்ளத்தில் யாராவது சிக்கி உதவி தேவைப்பட்டால் எங்களின் #Mantissa குழுவுக்கு +353857511112 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப் மூலம் தகவல் அனுப்புஙகள். உங்களை காப்பாற்ற நாங்கள் உதவி செய்வோம்.
#Mantissa குழு டப்ளின் மற்றும் அயர்லாந்தில் செயல்படுகிறது. அவர்கள் சென்னையில் குழு ஒன்றை அமைத்து மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
|
உணவு
பட்டினப்பாக்கத்தில் உணவு இரவு 7 மணி வாக்கில் தயாராகிவிடும். அதை வந்து எடுத்துச் சென்று மக்களுக்கு அளிக்குமாறு தொண்டர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கவனிக்கப்படாத பகுதிகளை தயவு செய்து பாருங்கள்.
|
லாரி
#BangaloreForChennai நிவாரண பொருட்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நாளை காலை 7 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கு கிளம்புகிறது. விபரங்கள் #ChennaiRainsHelp
|
நிவாரண பொருட்கள்
#BangaloreForChennai சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பெங்களூரில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் இடங்கள்..












Click it and Unblock the Notifications