நீட்: தமிழில் எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்.. ஹைகோர்ட் தீர்ப்பால் என்ன பலன் தெரியுமா?
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உத்தரவு, தமிழக மாணவர்களுக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும். நிறைய நன்மைகள் இதனால் அவர்களுக்கு ஏற்படும்.
Recommended Video

மதுரை: நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உத்தரவு, தமிழக மாணவர்களுக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும். நிறைய நன்மைகள் இதனால் அவர்களுக்கு ஏற்படும்.
தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளதால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.

49 வினா-விடைகள் தவறாக இருந்ததால் கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும். அதோடு புதிய மதிப்பெண் அடிப்படையில் சிபிஎஸ்இ புதிய தரவரிசை பட்டியல் உருவாக்க வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம் 24,000க்கும் அதிகமான மாணவர்கள், தமிழில், நீட் தேர்வு எழுதி இருக்கிறார்கள். இதனால் இவர்கள் எல்லோருக்கும் தனித்தனியாக மொத்தம் 190 மதிப்பெண்கள் அளிக்க வேண்டும். இது தமிழக மாணவர்களுக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும்.
இதன் மூலம் மிகவும் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கும் தற்போது வாய்ப்பு கிடைக்க வழியுள்ளது. முக்கியமாக தற்போது முதற்கட்ட, கவுன்சிலிங் முடிந்து இருக்கிறது. இதனால் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் இவர்களுக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.
சிபிஎஸ்இ தமிழக மாணவர்களை வஞ்சித்ததற்கு எதிராக மதுரை ஹைகோர்ட் கிளை சாட்டையை சுழற்றி இருக்கிறது. இது மத்திய அரசின் தவறால் அவதிப்பட்ட தமிழக மாணவர்களுக்கு வாழ்வளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications