நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் என்ன குற்றவாளிகளா?... சிபிஎஸ்இ வாரியம் மீது அன்புமணி பாய்ச்சல்!

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களை குற்றவாளி போல் நடத்தியது சிபிஎஸ்இ வாரியம் செய்த மனித உரிமை மீறல் ஆகும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களை குற்றவாளி போல் நடத்தியது சிபிஎஸ்இ வாரியம் செய்த மனித உரிமை மீறல் ஆகும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.

அகில இந்திய அளவில் தேர்வுகள் நடத்தி அதன் மூலம் மருத்துவ சேர்க்கை என்பது தமிழகத்தில் உள்ள ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்பதால் தமிழகத்தில் இந்த தேர்வுக்கு பலத்த எதிர்ப்பு கிளப்பியது. இந்நிலையில் நேற்று நீட் தேர்வு நாடெங்கும் நடந்தது. அப்போது மாணவர்களை மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனையிட்டது, தலைவிரிகோலமாக தேர்வுக்கு அனுப்பியது உள்ளிட்ட கெடுபிடிகளுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Neet exam restrictions: Anbumani Ramadoss condemns Central govt

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கையில், தமிழகத்தில் சிபிஎஸ் இ வாரிய அதிகாரிகள் மாணவர்களிடம் நடத்திய கெடுபிடிகள் மனித உரி்மை மீறல்களாகும். மாணவர்களை குற்றவாளிகள் போல் நடத்தியது மன்னிக்க முடியாததாகும்.

இதுபோன்ற உரிமை மீறல்களை சிபிஎஸ்இ செய்வது மன்னிக்க முடியாதது. இதனால் மாணவிகள் அழுது கொண்டே தேர்வு அறைக்கு சென்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது. வடஇந்தியாவில் மட்டும் இத்தகைய கெடுபிடிகள் காட்டப்படாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+