For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீட் கிடைக்காமல் ரயிலில் நின்று கொண்டே பயணித்த கிருஷ்ணசாமி.. எமனாகிப் போன நீட்!

நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமியின் மரணம் அனைவரையும் உலுக்கியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கிருஷ்ணசாமி உடல் உறவினரிடம் ஒப்படைப்பு- வீடியோ

    சென்னை: நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். இவர் நேற்று இரவு முழுக்க ரயிலில் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணித்ததாக கூறப்படுகிறது.

    இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் , கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    NEET Murder: No rest, Krishnasami gets heart attack after a long to travel to Kerala

    அனிதா உயிரை பலி வாங்கிய அதே நீட் தற்போது இன்னொரு உயிரையும் பலி வாங்கியுள்ளது. இந்த முறை தந்தை ஒருவரின் உயிரை பலி எடுத்திருக்கிறது மத்திய அரசின் இந்த நீட். நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

    திருத்துறைப்பூண்டியில் இருந்து மகனுடன் கேரளாவின் எர்ணாகுளம் சென்றவர், மகனை தேர்வு அறைக்கு அனுப்பிவிட்டு, ஹோட்டலில் தங்கி இருக்கிறார். இரவு முழுக்க பயணம் செய்து, மகனுடன் காலையில் தூங்காமல், தேர்வு அறையை கண்டுபிடித்த அலைச்சலில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    இவர்களுக்கு கடைசி நேரத்தில் வேறு மாநிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக அவசரம் அவசரமாக கேரளா செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் கடைசி நேரத்தில் இவர்களுக்கு தட்கலில் கூட டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் பணமும் இல்லாமல், ரயிலில் முன்பதிவு செய்யாமல், சாதராண பெட்டியில் பயணித்து இருக்கிறார்கள் கிருஷ்ணசாமியும், அவரது மகனும்.

    நேற்று முழுக்க இவர் தூங்காமல் நின்று கொண்டே பயணித்து இருக்கிறார். இதனால் இவரது உடல்நிலை மோசமாகி உள்ளது. இதன் காரணமாகவே இவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. பெரும் அலைச்சலும், மன உளைச்சலுமே இவரது மரணத்திற்கு காரணம் என்பது தெள்ள தெளிவாக தெரிந்துள்ளது.

    English summary
    NEET: Tamilnadu government arranges special buses for students to return from Kerala. SC has revoked the Madras High court order to cancelled the CBSE's order on NEET exam centres in Other States.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X