For Daily Alerts
Just In
நீட் தேர்வில் தோல்வி- திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை
நீட் தேர்வில் தோல்வியால் திருச்சி மாணவி தற்கொலை செய்துள்ளார்.
Recommended Video
நீட் தோல்வி- திருச்சி மாணவி சுபஸ்ரீ தற்கொலை- வீடியோ
திருச்சி: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீட் எனும் நாசகார தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த செஞ்சி பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் திருச்சி மாணவி சுபஸ்ரீ நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ் டூ தேர்வில் 907 மதிப்பெண்கள் எடுத்திருந்த சுபஸ்ரீ நீட் தேர்வில் தோல்வி அடைந்தார். இது குறித்து திருச்சி நெ.1 டோல்கேட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English summary
A 17-year-old girl from Tamil Nadu committed suicide after she failed to qualify NEET.