கந்துவட்டியால் பறிபோன உயிர்கள். நடவடிக்கை எடுக்காத நெல்லை ஆட்சியரை கண்டித்து போராட்டம்
கந்துவட்டி கொடுமையால் 3 உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை தமிழ் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டனர்.
Recommended Video

நெல்லை: கந்துவட்டி கொடுமையால் 3 உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை தமிழ் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டனர்.
கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கி முத்து என்ற கூலி தொழிலாளி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் நேற்று தீக்குளித்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடி பொதுமக்கள் முன்னிலையில் அவர்கள் கதறி துடித்தது பார்ப்பவர்களை பதற வைத்தது.

இந்த விபத்தில் அவரது மனைவி சுப்புலட்சுமி, 2 வயது குழந்தை அட்சய ப்ரணீதா, மற்றும் 5 வயது குழந்தை மதி சரண்யா ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் இசக்கி முத்த சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையல் கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையை கண்டித்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை தமிழ் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஆட்சியர், காவல்துறைக்கு எதிராகவும், கந்து வட்டியை தடுக்கக்கோரியும் முழக்கமிட்டனர்.
இதில் ஆண்கள் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
முன்னதாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக் கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தமிழ் அமைப்பினர் போராட்டத்துக்குப் பின்பும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications