நெல்லையில் கல்லூரி மாணவர்களுக்குள் கத்துகுத்து- போதை மருந்து விவகாரமா என விசாரணை
நெல்லை: கடையம் அருகே இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு கத்திகுத்து விழுந்தது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். இது அங்கு பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள புதுகிராமத்தில் ஒரு வீட்டில் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த அர்ஷாத், தென்மலை தடக்கின் புத்தன் தெருவை சேர்ந்த ரிஜோ இவர்கள் உள்பட 5 பேர் அங்க தங்கியிருந்து தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தனர்.

இந்த மவாணவர்களுக்கு கடையம் அருகே செட்டிகுலம் பகுதியை சேர்ந்த சுந்தராஜன் என்பவர் அறிமுகம் ஆனார். இந்த நிலையில் இரவு 10.30 மணி அளவில் சுந்தராஜன் புதுக்கிராமத்தில் உள்ள மாணவர்கள் வீட்டுக்கு சென்று பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென செல்போன் மற்றும் பர்சை திருடி கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவர்கள் சுந்தராஜனை ஓடி சென்று பிடிக்க முயன்றபோது அவர் அவர்களை கத்தியால் குத்தியாக கூறப்படுகிறது. இந்த கத்தி குத்தில் அர்ஷாத், ரிஜோ ஆகியோருக்கு கத்தி குத்து விழுந்துள்ளது. இதை பார்த்த மற்ற மாணவர்களும் சேர்ந்து சுந்தராஜனை பிடிக்க முயன்றதால் அவர் அந்த வழியாக வந்த பைக்கில் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. காயமடைந்த இருவரையும் மீ்ட்டு தென்காசி மருத்துவமனயில் சேர்ந்தனர். அIங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர்கள் பாளைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சுந்தராஜன் தப்பி செல்லும் போது ஒரு பையை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பையில் ஒரு கத்தி மற்றும் போதை மாத்திரைகள் இருந்தன. இதனால் போதை மருந்து விவகாரத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டார்களா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications