நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்களே உங்க ஊர்ல மிக கன மழை பெய்யுமாம்!
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஓய்வெடுத்து வந்த வடகிழக்குப் பருவமழை மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளது. சென்னையில் நேற்றிரவு முதலே அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்துவருகிறது.
வடகிழக்குப் பருவமழை தொடக்கத்தில் வட மாவட்டங்களில் கொட்டிய மழை தென் தமிழகத்திற்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இணை இயக்குநர் ஸ்டெல்லா இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

நெல்லை, குமரியில் மிக கனமைழை
அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரியில் ஒரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி நிலை கொண்டுள்ளதாக கூறினார்.

தென் தமிழகத்தின் அனேக இடங்கள்
இதனால், அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தின் அனேக இடங்களிலும், வட கடலோர பகுதி, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் உட்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.

இதுவரை நல்ல மழையில்லை
நெல்லை , கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மைய இணை இயக்குநர் ஸ்டெல்லா கூறியுள்ளார். வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்கள் நல்ல மழையை பார்க்கவில்லை.

மக்கள் மகிழ்ச்சி
இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த செய்தி அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications